Search This Blog

Wednesday, July 1, 2015

பிரிவின் வலி

நொடிக்கொரு முறை இறந்து
நொடிக்கொரு முறை பிறந்து
இது தான்  என் வழக்கை

என்று உன்னை சேர்வேன்
என்று உன்னில் கலப்பேன்
ஒரு கோடி சிந்தனைகள்
உன்னோட  விவாதிக்க  ஆசை
ஒரு கோடி உணர்வுகள்
உன்னோடு பங்குவைக்க ஆசை

ஆனால் நீயோ நிசப்தமாய்
எப்போதும் ஒரே போல் உன்
உலகத்தில் உன் ஆசைகளோடு
உன் போக்கிலே நடக்கிறாய்
பழக குழந்தையாய் இருக்கிறாய்
ஆனால் உள்ளே பாறையாய்
உன் வழக்கை விதிகள் வேறு
என் வழக்கை விதிகள் வேறு

நீ  என்னோடு உனது   ஆசைகள் 
உணர்வுகள்  சிந்தனைகள்  எல்லாம் 
பகிர்வாய்  என்ற தீரா ஆசையுடன்
பல முறை உயிர்த்து எழுகிறேன் 
வாழ்கை மிக மிக குறுகியது
ஆயுளின் நொடி பொழுதுகள்
குறைந்து கொண்டே போகிறது

என் ஆன்மாவோடு
கலந்து விட வருவாயா?
காத்து இருப்பேன் .........!!
விழிகலில் நீரோடு ......!!



2 comments:

  1. உங்களின் இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று வாசிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. nandri @‘தளிர்’ சுரேஷ் . Vasithen.

      Delete